கோவை சங்கனூர் பள்ளியில் 7 புதிய வகுப்பறைகளை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி

கோவை சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 7 புதிய வகுப்பறைகளை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார். மாவட்ட ஆட்சியர், எம்.பி., மாநகராட்சி ஆணையர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம், 32வது வார்டில் உள்ள சங்கனூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் தொடக்கக்கல்வி நிதி திட்டத்தின் கீழ் ரூ.91 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 7 கூடுதல் வகுப்பறைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் Kranthi Kumar Pati, கோயம்புத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கணபதி.ப.ராஜ்குமார், மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், மாநகராட்சி துணை ஆணையாளர் டாக்டர் ச.செல்வசுரபி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, மத்திய மண்டல தலைவர் மீனாலோகு, கல்விக்குழு தலைவர் மாலதி நாகராஜ், மாமன்ற உறுப்பினர் ரா.பார்த்திபன் ஆகியோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



மேலும், மாநகராட்சி செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் ஹேமலதா மற்றும் பல மாநகராட்சி அலுவலர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இந்த புதிய வகுப்பறைகள் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...