பொள்ளாச்சியில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாட்டம்: குடும்ப கட்டுப்பாடு குறித்து விழிப்புணர்வு

பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்பட்டது. குடும்ப கட்டுப்பாடு முறைகள், இளம் வயது திருமணத்தின் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.


Coimbatore: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மாவட்ட குடும்ப நல துறையுடன் இணைந்து 2024 ஆம் ஆண்டுக்கான உலக மக்கள் தொகை தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

விழாவில் தாய்மார்களுக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் (பொறுப்பு) டாக்டர் கார்த்திகேயன், மகப்பேறு துறையின் தலைவர் டாக்டர் ராஜேஸ்வரி, டாக்டர் ராஜாத்தி, மகப்பேறு உதவியாளர் திருமதி குணவதி, கவுன்சிலர் திருமதி மகேஸ்வரி முதலியார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



"ஒவ்வொரு தம்பதியரின் பெருமை குடும்ப நலம் - இதுவே வளர்ந்த இந்தியாவின் புதிய அடையாளம்" என்ற இந்த வருடத்தின் கருப்பொருள் விளக்கி கூறப்பட்டது. குடும்ப கட்டுப்பாட்டு முறைகள் அனைத்தும் தாய்மார்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

சட்டப்படி குறைந்தபட்ச திருமண வயது 18 என்பதும், இளம் வயதில் திருமணம் செய்வதால் ஏற்படும் உடல் பாதிப்புகளும் விளக்கப்பட்டன. முதல் குழந்தை பிறந்த பிறகு இரண்டு வருடங்களுக்குப் பிறகே இரண்டாவது குழந்தை பெற வேண்டும் என்றும், இடைப்பட்ட காலத்தில் தற்காலிக கருத்தடை முறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.



மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மகப்பேறு மருத்துவர்கள் மூலம் தினமும் செய்யப்படுவதாகவும், 22 வயதுக்குப் பிறகு இரண்டு குழந்தைகள் பிறந்த பின் அறுவை சிகிச்சை மூலம் குடும்பக் கட்டுப்பாடு அரசு மருத்துவமனைகளில் இலவசமாகச் செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

"நாம் இருவர் நமக்கு இருவர்" என்ற கொள்கையின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டு, இரண்டு குழந்தைகளுடன் தாய் மற்றும் தந்தை அந்தக் குழந்தைகளை சிறப்பாக வளர்க்க வேண்டியதன் அவசியம் குறித்தும் விளக்கப்பட்டது.

Newsletter

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...