கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் தற்கொலை

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு உடற்கல்வியல் மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு உடற்கல்வியல் மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு உடற்கல்வியியல் படித்து வந்தார். இன்று காலை முதல் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த சுபாஷ், மதியம் தனது விடுதி அறைக்குச் சென்றார்.

பின்னர், அவரது அறையில் இருந்து எந்த சத்தமும் கேட்காததால் சக மாணவர்கள் சந்தேகம் அடைந்து அறையை திறந்து பார்த்தனர். அப்போது சுபாஷ் தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...