கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு மாணவர் தற்கொலை

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு உடற்கல்வியல் மாணவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Coimbatore: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இரண்டாம் ஆண்டு உடற்கல்வியல் மாணவர் ஒருவர் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த சுபாஷ் என்ற மாணவர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு உடற்கல்வியியல் படித்து வந்தார். இன்று காலை முதல் வாலிபால் விளையாடிக் கொண்டிருந்த சுபாஷ், மதியம் தனது விடுதி அறைக்குச் சென்றார்.

பின்னர், அவரது அறையில் இருந்து எந்த சத்தமும் கேட்காததால் சக மாணவர்கள் சந்தேகம் அடைந்து அறையை திறந்து பார்த்தனர். அப்போது சுபாஷ் தூக்கிட்டு இறந்த நிலையில் காணப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் உயிரிழந்த மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து வடவள்ளி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவரின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...