கோவை பெரியகடை வீதியில் பெண்களிடம் அத்துமீறும் வியாபாரிகள் மீது நடவடிக்கை கோரி மக்கள் புகார்

கோவை பெரியகடை வீதியில் பெண்களிடம் அத்துமீறும் கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போதையில் பெண்களிடம் தகராறு செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதாக புகார் எழுந்துள்ளது.



Coimbatore: கோவை பெரியகடை வீதியில் பெண்களிடம் அத்துமீறும் கடை வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை பெரியகடை வீதிக்கு திருப்பூர், நீலகிரி, சேலம், ஈரோடு போன்ற பிற மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பொருட்கள் வாங்க வருகின்றனர். இந்நிலையில், சாலையோரம் உள்ள கடைகளில் சில ஊழியர்கள் பொதுமக்களை கட்டாயப்படுத்தி தங்கள் கடைகளுக்கு வரச் செய்வதாகவும், குறிப்பாக பெண்களை அத்துமீறி நடந்து கொள்வதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

சில கடை ஊழியர்கள் போதையில் பெண்களிடமும், பொதுமக்களிடமும் தகராறு செய்வது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும், இதனை காவல்துறை கண்டுகொள்ளவில்லை என்றும் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.

பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான கடைகளில் சுதந்திரமாக பொருட்கள் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த அத்துமீறல்களை தடுக்க கோவை மாவட்ட நிர்வாகமும், கோவை மாவட்ட காவல்துறையும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மக்கள் ஜூலை 11 அன்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் குறித்து அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள் என்பதை பொதுமக்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

Newsletter

கோவை பிஎஸ்என்எல் அலுவலகத்தில் விழுந்த மயில் குஞ்சை தீயணைப்பு துறையினர் மீட்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள BSNL அலுவலக கட்டிட ஜன்னல் இடுக்கில் இருந்து கீழே விழுந்த மயில் குஞ்சை தீயணைப்...

தீரன் சின்னமலையின் 221-வது நினைவு நாள்: கோவையில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மலரஞ்சலி

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மேற்கு மாநகர் சார்பில் கவுண்டம்பாளையம் பிரதான சாலையில் அலங்கரித்து வைக்கப்பட்டிரு...

பேரூர் படித்துறையில் நீரின்றி கலை இழந்த ஆடிப்பெருக்கு; குழாய் மூலம் நீர் வழங்கும் பேரூராட்சி

கோவை பேரூர் படித்துறையில் ஆடி பதினெட்டாம் பெருக்கை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் செய்து வழிபட்டனர். எனினும், பட...

பொள்ளாச்சி அருகே தண்ணீர் லாரி மீது கார் மோதி விபத்து; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் நடுப்பகுதியில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நின்றிருந்த லாரியின் மீது...

கிணத்துக்கடவு அருகே பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்த வழக்கு; தந்தை, மகன் கைது

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே ஜூலை 27 ஆம் தேதி பெண்ணைக் கொலை செய்து உடலை எரித்து சான்றுகளை அழிக்க முயன்ற வழக்கில், ப...

பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க செப்டம்பர் 26, 2026 வரை அவகாசம்: கோவை ஆட்சியர் அறிவிப்பு

கோவை மாவட்டத்தில் 2000-ஆம் ஆண்டுக்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழில் பெயர் இல்லாதவர்கள் செப்டம...