கோவை மருதமலை கோயில் பாதையில் குட்டிகளுடன் கடந்து செல்லும் யானைக் கூட்டம்: வைரலாகும் வீடியோ

கோவை மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் குட்டிகளுடன் பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சாலையைக் கடந்து சென்றன. இந்த காட்சியை பக்தர் ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.


கோவை: கோவை மருதமலை கோயிலுக்கு செல்லும் மலைப் பாதையில் குட்டிகளுடன் காட்டு யானைக் கூட்டம் சாலையைக் கடந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மருதமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள வடவள்ளி, ஐ.ஓ.பி காலனி, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அவ்வப்போது ஊர்களுக்குள் வந்து செல்வது வழக்கமாகிவிட்டது.

கடந்த சில நாட்களாக ஒற்றை யானை மற்றும் இரண்டு காட்டு யானைகள் மருதமலைக்கு பக்தர்கள் நடந்து செல்லும் படிக்கட்டு பாதை மற்றும் மலைச் சாலையில் கடந்து சென்று வந்தன. இந்நிலையில், ஜூலை 11 அதிகாலை பத்துக்கும் மேற்பட்ட காட்டு யானைகள் குட்டிகளுடன் மருதமலை மலைச் சாலையைக் கடந்து சென்றுள்ளன.

இந்தக் காட்சியை கோயிலுக்கு சென்ற பக்தர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நிகழ்வதால், வனத்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...