ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குடமுழுக்கு விழா தை மாதத்திற்குள் நடைபெறும்: பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா தை மாதத்திற்குள் நடைபெறும் என்று பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார். கோயில் ராஜகோபுரத்தில் பாலாலய பூஜை நடைபெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா வரும் தை மாதத்திற்குள் நடைபெறும் என்று பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி தெரிவித்துள்ளார். கோயில் ராஜகோபுரத்தில் பாலாலய பூஜை நடைபெற்றதை அடுத்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



ஆனைமலை மாசாணியம்மன் கோயில் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் ஒன்றாகும். இக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். குறிப்பாக அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

தமிழக முதலமைச்சர் சட்டசபையில் ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா நடத்தப்படும் என அறிவித்திருந்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று கோயிலின் ராஜகோபுரம் முன் பகுதியில் பாலாலய பூஜை நடைபெற்றது.



இந்நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி எம்பி ஈஸ்வரசாமி, "தமிழகத்தில் இதுவரை 5000-க்கும் மேற்பட்ட கோயில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா தமிழக முதலமைச்சரால் நடத்தப்பட்டுள்ளது. அந்த வரிசையில் உலகப் புகழ்பெற்ற ஆனைமலை மாசாணியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான ஆயத்தப் பணிகள் இன்று துவங்கியுள்ளன. வரும் தை மாதத்திற்குள் குடமுழுக்கு நடைபெறும்," என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் அறங்காவலர் குழு தலைவர் முரளி கிருஷ்ணன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைவாணி சாந்தலிங்கம், ஒன்றிய செயலாளர் தேவசேனாதிபதி, யுவராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் DST-FIST ஆதரவுடன் ₹1 கோடி மதிப்பில் ஆராய்ச்சி உள்கட்டமைப்பு வலுப்படுத்தல்

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் மார்ச் 25, 2026 அன்று DST-FIST நிதியுதவியுடன் ₹1 கோடி மதி...

கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடை...

பள்ளபாளையத்தில் புதிய ஆட்டோமொபைல் கடையினை திறந்து வைத்தார் திமுக கழக செயலாளர் முருகேசன்

கோவை தெற்கு மாவட்டம் பள்ளபாளையம் பேரூராட்சி பாப்புலர் கார்டன் பகுதியில் அமைந்துள்ள புதிய ஆட்டோமொபைல் கடையினை திமுக கழக ச...

கோவையில் செல்போனில் பேசியபடி நடந்த இளைஞர் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்து பலி

கோவை வடவள்ளியில் மனைவியுடன் செல்போனில் பேசியபடி மாடிக்கு நடந்து சென்ற ஜேசிபி ஆபரேட்டர் விவேக் (33) இரண்டாவது மாடியில் இர...

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...