பெரியநாயக்கன்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்

பெரியநாயக்கன்பாளையம் விவேகானந்தபுரம் சமுதாயக்கூடத்தில் ஜூலை 14 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது. கண் புரை, குழந்தைகளின் கண் நோய்கள், கண் அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு கண் நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் வரும் ஜூலை 14ஆம் தேதி நடைபெற உள்ளது. ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம், ஐ பவுண்டேஷன் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி ஆகியவை இணைந்து இந்த முகாமை ஏற்பாடு செய்துள்ளன.


பெரியநாயக்கன்பாளையம், கஸ்தூரிபாளையம் செல்லும் சாலையில் 5 Corner பகுதியில் உள்ள விவேகானந்தபுரம் சமுதாயக் கூடத்தில் இந்த முகாம் நடைபெறும். காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கண் புரை கண்டறிதல், குழந்தைகளுக்கான கண் நோய்கள், கண் நீர் அழுத்த நோய், தூரப்பார்வை, கிட்டப் பார்வை, வெள்ளெழுத்து போன்ற பல்வேறு கண் நோய்களுக்கு சிறந்த முறையில் மருத்துவ குழுவினர் சிகிச்சை அளிக்க உள்ளனர்.


பெரியவர்கள், சிறியவர்கள் என கண் தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் இந்த முகாமில் நிவாரணம் பெறலாம். கண்புரை பரிசோதனைக்கு பிறகு அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கு சிறந்த முறையில் அறுவை சிகிச்சை செய்து தரப்படும். முகாமில் கலந்து கொள்ள வரும் பொழுது ஆதார் அட்டையின் நகல் எடுத்து வர வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்டங்கள் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நெடுஞ்சாலைத்துறை வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து...

கோவையில் சர்வதேச மாநாட்டில் சிறந்த அறிவியல் சிந்தனைகளுக்கு ரூ.1 லட்சம் பரிசு

கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 3 முதல் 5 வரை நடைபெறும் AMCEHA 2026 சர்வதேச மாநாட்டில், சிறந்த அறிவியல் சிந்தனை மற்ற...

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆய்வு

கோவையில் விளையாட்டு மற்றும் பொதுப்பணி துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரு உள்விளையாட்டு அரங்கில் கபடி வீரர்களைச் சந்தித்து அ...

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...