திருப்பூர் பின்னலாடை தொழில் நாட்டின் பொருளாதாரத்துக்கு பக்கபலம் - மத்திய செயலர் தாஸ் பெருமிதம்

திருப்பூரில் ஏற்றுமதியாளர்களுடன் நடந்த கூட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் மத்திய செயலர் தாஸ் திருப்பூர் பின்னலாடை தொழிலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.


Coimbatore: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் மத்திய செயலர் தாஸ், தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன தொழில் செயலர் அர்ச்சனா பட்நாயக் உள்ளிட்ட 10 ஐஏஎஸ் அதிகாரிகள், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதியாளர்களுடன் கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவன தொழில் செயலர் அர்ச்சனா பட்நாயக், "தமிழகத்தின் முக்கியத் தொழில் நகரமாக திருப்பூர் பின்னலாடைத் தொழில் மூலம் மாநிலத்தின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருகிறது. இங்கு பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளோம். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் குறித்து சரி, தவறுகளை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இந்த தொழிலின் நீண்டநாள் கோரிக்கைகள் குறித்து மாநில அரசுக்கு கொண்டு செல்லப்படும்" என்று தெரிவித்தார்.



சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் மத்திய செயலர் தாஸ் பேசுகையில், "ஏற்றுமதியில் ஜவுளித்துறை முன்னிலையில் உள்ளது. ஜவுளித்தொழிலில் செயற்கை நூலிழை உலக அளவில் 70 சதவீதம் பயன்பாட்டில் உள்ளது. வெளிநாடுகளில் 3 மாதங்கள் கோடையும், 9 மாதங்கள் குளிரும் இருப்பதால் அங்கு அதிகளவில் செயற்கை நூலிழை எனப்படும் பாலியெஸ்டரின் பயன்பாடு தான் அதிகளவில் உள்ளது. இன்றைக்கு ரூ. 35 ஆயிரம் கோடி ஏற்றுமதி என்பது நல்ல கட்டமைப்பு தான். தொடர்ந்து முன்னோக்கி செல்ல, இந்த கட்டமைப்பு நமக்கு பயன்படும். நாட்டின் வளர்ச்சிக்கு இது உதவும்" என்றார்.

மேலும் அவர், "கிரீன் டெக்னாலஜிக்கான மூலப்பொருட்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். நிதி ஆயோக் மூலம் இந்த தொழிலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படும். நாட்டின் பொருளாதாரத்துக்கு திருப்பூர் போன்ற பின்னலாடை நகரங்கள் பக்கபலமாக உள்ளது" என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். பின்னர், தொழில்துறையினருடன் ஆலோசனையில் ஈடுபட்டு, அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

Newsletter

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...