கோவையில் அண்ணாமலையின் படத்தை கிழித்தெரிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை கிழித்தெரிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். செல்வப்பெருந்தகை குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


கோவை: கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் படத்தை கிழித்தெரிந்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்திலிருந்து தான் பின்வாங்க போவதில்லை என்றும், செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் வழக்கம் தனக்கு இல்லை என்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், செல்வப்பெருந்தகை எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரலாம், அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தான் தயாராக இருப்பதாகவும் அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார்.



இந்த பதிவுக்கு காங்கிரஸ் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் வடக்கு மாவட்ட தலைவர் வி எம் சி மனோகரன் தலைமையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, அண்ணாமலையின் புகைப்படத்தை கிழித்து எரித்தனர்.



மேலும், கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் கவுன்சிலர்கள் சங்கர், காயத்ரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...