கோவை சின்னவேடம்பட்டி ஏரி நீர்வழித்தடங்களை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் சின்னவேடம்பட்டி ஏரியின் நீர்வழித்தடங்களை ஆய்வு செய்தார். 200 ஏக்கர் பரப்பளவுள்ள இந்த ஏரி, சுமார் 25 கி.மீ சுற்றளவில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் மா. சிவகுரு பிரபாகரன் IAS, இன்று (10.07.2023) சின்னவேடம்பட்டி ஏரிக்கு வரும் நீர்வழித்தடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோவை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ள சின்னவேடம்பட்டி ஏரி சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீரே இந்த ஏரியின் முக்கிய நீர் ஆதாரமாகும். கணுவாய் பகுதியில் தொடங்கி, துடியலூர், விஸ்வநாதபுரம் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள வாய்க்கால்கள் வழியாக மழைநீர் இந்த ஏரியை வந்தடைகிறது.

இந்த ஏரியானது உடையாம்பாளையம், நல்லாம்பாளையம், காளப்பட்டி, விளாங்குறிச்சி, செராயம்பாளையம், மயிலம்பட்டி, ஆண்டக்காபாளையம், வெள்ளானப்பட்டி, அரசூர் மற்றும் சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துகிறது.



மாநகராட்சி ஆணையர் இன்று மேற்கொண்ட ஆய்வின் போது, கணுவாய் அணைக்கட்டு, கணுவாய் தடுப்பணை, நஞ்சுண்டாபுரம், வீரபாண்டி பிரிவு, சின்ன தடாகம், மாங்கரை சின்ன தடாகம் மேம்பாலம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டார்.



சின்னவேடம்பட்டி ஏரிக்கான நீர்வரத்து குறித்தும், நீர் வரத்திற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அலுவலர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் அம்சராஜ், உதவிப் பொறியாளர் சிவக்குமார், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் எழில், உதவிப் பொறியாளர் ஜெயின்ராஜ், கௌசிகா நீர் கரங்கள் ஒருங்கிணைப்பாளர் சிவராஜா, வனத்துறை வனவர் மதுசூதனன், வனக்காப்பாளர் மணிராஜ் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...