மடத்துக்குளத்தில் காலமான சிறப்பு உதவி ஆய்வாளருக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் (54) காலமானார். அவரது உடலுக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. காவல்துறை அதிகாரிகள், உறவினர்கள், பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் பகுதியைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் செல்வம் (54) உடல்நலக் குறைவால் காலமானார். அவரது உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

தமிழ்நாடு காவல்துறையில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த செல்வம், நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்தார். அவரது உடல் நேற்று இரவு சொந்த ஊரான மடத்துக்குளத்திற்கு கொண்டு வரப்பட்டது.



அரசு உத்தரவின் பேரில், செல்வத்தின் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் டிஎஸ்பி சுகுமாரன், இன்ஸ்பெக்டர்கள் பாலமுருகன், நிர்மலா தேவி ஆகியோர் பங்கேற்று மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினர். மேலும், காவல்துறையினர், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...