புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பொள்ளாச்சியில் வழக்கறிஞர்கள் மறியல் போராட்டம்

பொள்ளாச்சியில் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கறிஞர்கள் அஞ்சல் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தினர். மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.


Coimbatore: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் வழக்கறிஞர்கள் பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வழியாக பேரணியாக வந்தனர்.

பின்னர் உடுமலை சாலையில் உள்ள தலைமை அஞ்சல் துறை அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் உதயகுமார் கூறுகையில், "மத்திய அரசின் இந்த புதிய சட்ட திருத்த மசோதாவால் வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள். பொதுமக்களை வழக்கறிஞர்களை அடக்கு முறையோடு கையாளும் இந்த புதிய சட்ட திருத்தம் காவல்துறை வருவாய்த் துறையோடு இணைந்து போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அமையும்" என்றார்.

மேலும் அவர், "பொதுமக்கள், வழக்கறிஞர்கள் நியாயங்களையும் நீதிமன்றங்களின் மாண்பையும் குறைக்கும் செயல் எனவே இந்த சட்டமன்ற திருத்த மசோதாவை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். சமஸ்கிருதம், ஹிந்தியை திணிக்கின்ற இந்த முயற்சியை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டங்கள் வெடிக்கும்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...