புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து பொள்ளாச்சியில் வழக்கறிஞர்கள் மறியல் போராட்டம்

பொள்ளாச்சியில் மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கறிஞர்கள் அஞ்சல் அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தினர். மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி, சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.


Coimbatore: மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் வழக்கறிஞர்கள் பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து மத்திய பேருந்து நிலையம் வழியாக பேரணியாக வந்தனர்.

பின்னர் உடுமலை சாலையில் உள்ள தலைமை அஞ்சல் துறை அலுவலகம் முன்பு மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய குற்றவியல் சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர். அப்போது திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் உதயகுமார் கூறுகையில், "மத்திய அரசின் இந்த புதிய சட்ட திருத்த மசோதாவால் வழக்கறிஞர்கள் மட்டுமல்லாது பொது மக்களும் பாதிக்கப்படுவார்கள். பொதுமக்களை வழக்கறிஞர்களை அடக்கு முறையோடு கையாளும் இந்த புதிய சட்ட திருத்தம் காவல்துறை வருவாய்த் துறையோடு இணைந்து போராட்டங்களை ஒடுக்கும் வகையில் அமையும்" என்றார்.

மேலும் அவர், "பொதுமக்கள், வழக்கறிஞர்கள் நியாயங்களையும் நீதிமன்றங்களின் மாண்பையும் குறைக்கும் செயல் எனவே இந்த சட்டமன்ற திருத்த மசோதாவை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம். சமஸ்கிருதம், ஹிந்தியை திணிக்கின்ற இந்த முயற்சியை மத்திய அரசு கைவிடும் வரை போராட்டங்கள் வெடிக்கும்" என்று தெரிவித்தார்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...