கோயம்புத்தூர் கற்பகம் பல்கலையில் 'துளிர்-2024' வரவேற்பு விழா

கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களுக்கான 'துளிர்-2024' வரவேற்பு விழா ஜூலை 3 முதல் 9 வரை நடைபெற்றது. மாணவர்களின் வளர்ச்சி, தன்னம்பிக்கை மற்றும் ஒழுக்கம் குறித்து பல்வேறு தலைவர்கள் உரையாற்றினர்.


கோவை: கோயம்புத்தூர் கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் 'துளிர்–2024' விழா ஜூலை 3, 4, 5 மற்றும் 8, 9 ஆகிய ஐந்து நாட்கள் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலை, அறிவியல், வணிகவியல் மற்றும் மேலாண்மையியல் புல முதன்மையர் முனைவர் நா.வெ. பாலாஜி வரவேற்புரை வழங்கினார்.

கற்பகம் கல்விக்குழுமங்களின் தலைவர் Dr. இராச. வசந்தகுமார் தமது தலைமையுரையில், "நவீனத் தொழில்நுட்பம் மிக்க நாடுகளில் இந்தியா சிறந்து விளங்குகிறது. இந்தியாவின் வளர்ச்சி மாணவர்களின் அயராத உழைப்பில் இருக்கிறது. மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் விளங்க வேண்டும். திருக்குறளை வாழ்வியல் நூலாகக் கொள்ள வேண்டும்" என்று சிறப்புரை வழங்கினார்.



ஐந்தாம் நாள் (09.07.2024) நிகழ்வில் இன்போசிஸ் நிறுவனத்தின் AVP & HR லீடர், 'மாற்றம்' அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஜே. சுஜித் குமார் சிறப்புரை வழங்கினார்.



அவர், "மாணவர்கள் தங்களது குறிக்கோளைத் திட்டமிட்டு, காலத்தை முறையாகப் பயன்படுத்தி, தன்னம்பிக்கையோடு தொடர்ந்து முயன்றால் வெற்றி உறுதி" என்று அறிவுறுத்தினார்.

கற்பகம் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேந்தர் முனைவர் கே.இராமசாமி, "மாணவர்கள் ஒழுக்கத்துடன் கூடிய கல்வியைப் பயின்று வெற்றி பெற வேண்டும்" என்று வலியுறுத்தினார். துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி, தாய்நாட்டின் பெருமை, மாணவர்களின் கடமை, மாணவர்களின் நலனுக்காக பெற்றோர்களின் உழைப்பு, வெற்றியின் மீதான மன ஒருமைப்பாட்டின் இன்றியமையாமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

விழாவின் நிறைவாக மாணவர் நலன் முதன்மையர் முனைவர் ப. தமிழரசி நன்றியுரை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...