பொள்ளாச்சியில் 52 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: ஒருவர் கைது

கோவை மாவட்ட காவல்துறை பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் 52.674 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர். போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களின் உத்தரவின் பேரில், போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இன்று (07.07.2024) மாக்கினாம்பட்டி பிரிவு அருகே நடத்தப்பட்ட வாகன சோதனையின் போது, நான்கு சக்கர வாகனத்தில் புகையிலைப் பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்த பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் முகமது அபிதீன் (51) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து சுமார் 52.674 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டத்தில் போதைப் பொருட்களின் விற்பனையை தடுக்கும் பொருட்டு, கடந்த 01.05.2024 முதல் மாவட்ட காவல்துறையினரால் சிறப்பு அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுவரை தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 98 நபர்கள் மீது 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், சுமார் 1247.634 கிலோகிராம் எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், போதைப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார். இது போன்ற குற்றங்கள் குறித்து தகவல் தெரிவிக்க பொதுமக்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம் என்றும், தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...