பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் கொலை: மூன்று பேர் கைது

பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் பிரபாகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கோவை போலீசார் விசாரணையில் இளஞ்சிறார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் பிரபாகரன் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளஞ்சிறார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜாவின் மகன் பிரபாகரன் (32) சொந்தமாக சரக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், அடையாளம் தெரியாத நபர்கள் பிரபாகரனிடம் வாடகைக்கு ஆட்டோ வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். செட்டிப்பாளையம் வடசித்தூர் சாலையில், பனப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ சென்றபோது, திடீரென பிரபாகரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்கள்.



இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நெகமம் போலீசார், மோப்ப நாய் மற்றும் தடய நிபுணர்களின் உதவியுடன் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். விசாரணையில், கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரனின் தங்கையின் கணவரான சாதிக் பாஷா (36) கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், சாதிக் பாஷா வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பிரபாகரன் தடையாக இருந்ததால், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரியவந்தது. இதற்காக தனது நண்பர் மணிகண்டன் (24) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோரின் உதவியுடன் கொலை செய்ததாக சாதிக் பாஷா வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, சாதிக் பாஷா, மணிகண்டன் மற்றும் இளஞ்சிறார் ஆகிய மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Newsletter

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...