பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் கொலை: மூன்று பேர் கைது

பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் பிரபாகரன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கோவை போலீசார் விசாரணையில் இளஞ்சிறார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.


Coimbatore: கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சரக்கு ஆட்டோ உரிமையாளர் பிரபாகரன் (32) வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளஞ்சிறார் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோவை சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் ரோடு, சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்த ராஜாவின் மகன் பிரபாகரன் (32) சொந்தமாக சரக்கு ஆட்டோ வாங்கி ஓட்டி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன், அடையாளம் தெரியாத நபர்கள் பிரபாகரனிடம் வாடகைக்கு ஆட்டோ வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். செட்டிப்பாளையம் வடசித்தூர் சாலையில், பனப்பட்டி பிரிவு அருகே ஆட்டோ சென்றபோது, திடீரென பிரபாகரனை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவானார்கள்.



இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த நெகமம் போலீசார், மோப்ப நாய் மற்றும் தடய நிபுணர்களின் உதவியுடன் 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளைத் தேடி வந்தனர். விசாரணையில், கோவை போத்தனூர் பகுதியைச் சேர்ந்த பிரபாகரனின் தங்கையின் கணவரான சாதிக் பாஷா (36) கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், சாதிக் பாஷா வேறொரு பெண்ணை திருமணம் செய்வதற்கு பிரபாகரன் தடையாக இருந்ததால், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டதாக தெரியவந்தது. இதற்காக தனது நண்பர் மணிகண்டன் (24) மற்றும் ஒரு இளஞ்சிறார் ஆகியோரின் உதவியுடன் கொலை செய்ததாக சாதிக் பாஷா வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து, சாதிக் பாஷா, மணிகண்டன் மற்றும் இளஞ்சிறார் ஆகிய மூவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...