கோவை மாநகராட்சியின் சாலையோர வாகன நிறுத்த கட்டண திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி சாலையோரங்களில் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு வர்த்தகத்தை பாதிக்கும் என்று வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நுகர்வோர் அமைப்புகளும் இந்த திட்டத்தை விமர்சித்துள்ளன.


Coimbatore: கோவை மாநகராட்சி சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கும் முடிவு எடுத்துள்ளது. இந்த முடிவு பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகளிடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விரிவுபடுத்தப்பட்ட கோவை மாநகராட்சியில் தற்போது 100 வார்டுகள் உள்ளன. அவிநாசி சாலை, காந்திபுரம், திருச்சி சாலை, சத்தி சாலை, பொள்ளாச்சி சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாத நிலையில், மாநகராட்சி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோவை அமைப்பின் தலைவர் ஜெயராமன், மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பிய கடிதத்தில், "சொத்து வரி 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில், வரி செலுத்தும் மக்களுக்கு தேவையான வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்தி தர வேண்டியது மாநகராட்சி நிர்வாகத்தின் கடமை" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்படும் இடங்களில் 'மல்டி லெவல்' வாகன நிறுத்துமிட வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார்.

கோவை தங்க நகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் முத்து வெங்கட்ராம், "கோவை நகரின் சில முக்கிய பகுதிகளில் மட்டும் இத்திட்டம் அமல்படுத்தப்படும். இதனால் வர்த்தகம் கடுமையாக பாதிக்கும். இது போன்ற திட்டங்களை அமல்படுத்தும் முன் வர்த்தகர்களை அழைத்து மாநகராட்சி நிர்வாகம் ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

தற்போதுள்ள கட்டண வாகன நிறுத்துமிடங்களில் நிர்ணயிக்கப்பட்டதை விட அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்த நிலையில், அவற்றை முறைப்படுத்த மாநகராட்சி நிர்வாகத்தால் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சாலையோரங்களில் வாகன நிறுத்தத்திற்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம், வர்த்தகர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்களுக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர்ப்பாளர்கள் கருதுகின்றனர்.

Newsletter

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

ஜவுளித்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தில் கொங்கு மண்டலத்திற்கு முக்கியத்துவம் அளிக்க கோரிக்கை

ஜவுளித்துறை மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் நியமனத்தின் போது கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களுக்க...

குறு, சிறு தொழில் முனைவோரின் பிரச்சனைகள்; அமைச்சர் செங்கோட்டையனிடம் முன்வைத்த கூட்டமைப்பினர்

குறு, சிறு தொழில் முனைவோரின் மின் கட்டண உயர்வு, SGST பழைய கணக்கு சோதனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடு...

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...