கோவை அரசு பொருட்காட்சியை நீட்டிக்க வியாபாரிகள் கோரிக்கை

கோவை வஉசி மைதானத்தில் நடைபெறும் அரசு பொருட்காட்சியை ஜூலை 14 வரை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்தல் காரணமாக தாமதமாக தொடங்கிய காட்சியில் மக்கள் வருகை குறைவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Coimbatore: கோவையில் தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை சார்பில் வஉசி மைதானத்தில் நடைபெற்று வரும் அரசு பொருட்காட்சியை நீட்டிக்க வேண்டும் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இங்கு அரங்கம் அமைத்துள்ள வியாபாரிகள் சார்பில், தமிழக அரசின் செய்தி-மக்கள் தொடர்பு துறை இயக்குனருக்கு அண்மையில் மனு ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த மனுவில், கடந்த மே 29 அன்று தொடங்கிய இப்பொருட்காட்சி ஜூலை 12 அன்று நிறைவடைய உள்ளதாகவும், இதனை ஜூலை 14 வரை நீட்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வழக்கமாக கோடை விடுமுறை காலத்தில் நடைபெறும் இந்த பொருட்காட்சி, இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தாமதமாக தொடங்கியது. தற்போது கோடை விடுமுறை முடிந்து, பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளதால், மக்களின் வருகை குறைவாக உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை சுமார் 1.50 லட்சம் பேர் மட்டுமே பொருட்காட்சிக்கு வருகை புரிந்துள்ளனர். கடந்த ஆண்டு 2.50 லட்சம் பேர் வருகை புரிந்ததாகவும், அதற்கேற்ப வருவாய் இருந்ததாகவும், ஆனால் தற்போது வருவாய் அளவும் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பொருட்காட்சியில் அரசின் நலத்திட்டங்களை மக்கள் கண்டுகளித்து வருவதோடு, பொழுதுபோக்கு அம்சங்களையும் பயன்படுத்தி வருவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருட்காட்சியை நீட்டிப்பதன் மூலம் மேலும் அதிக மக்கள் பயனடைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...