சைபர் குற்றங்கள் அதிகரிப்பு: காவல்துறைக்கு சவால் - கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவையில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு குறித்தும், காவலர்களுக்கான மருத்துவ முகாம் பற்றியும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மற்றும் சைபர் குற்றங்கள் விசாரணை குறித்தும் விளக்கமளித்தார்.


Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது காவல்துறைக்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு சவால் என்று தெரிவித்துள்ளார். அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசிய அவர், சைபர் குற்றங்கள் குறித்து வழக்குகளில் தனி குழுவினர் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடத்தப்பட்ட இந்த முகாமில், ஆயுர்வேதம், உட்சுரப்பியல், பிசியோதெரபி, பெண்கள் தொடர்பான மருத்துவம், நுரையீரல் பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. காவலர்களின் உடல்நல ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.



மேலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி பொதுமக்களுக்கென பிரத்யேக வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் பாலகிருஷ்ணன் உறுதியளித்தார்.

சைபர் குற்றங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அதையும் தாண்டி சிலர் ஏமாந்து விடுவதாகவும் கவலை தெரிவித்த அவர், இது போன்ற வழக்குகளில் தனி குழுவினர் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்றும் உறுதியளித்தார்.



முகாம் துவக்க நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் சரவணன், சுகாசினி, உதவி ஆணையர் சேகர், ஸ்வர்கா பவுண்டேஷன் தாளாளர் தினேஷ் குமார் பாண்டியா, நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதா, தாளாளர் குருபிரசாத் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...