கோவையில் மருத்துவ அலட்சியத்தால் உயிரிழந்த மனைவி: கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

கோவையில் மருத்துவ அலட்சியத்தால் மனைவி உயிரிழந்த வழக்கில், கணவருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Coimbatore: கோவை மாதம்பட்டி பகுதியைச் சேர்ந்த தமிழக மின் வாரிய உதவிப் பொறியாளர் சாய் பிரேமனின் (45) மனைவி ராஜலட்சுமி (43), 2018 ஜனவரி 8-ஆம் தேதி இருசக்கர வாகன விபத்தில் சிக்கி தாடை எலும்பில் சிறு விரிசல் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, ரத்தம் செலுத்தப்பட்ட பின் உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

உடற்கூராய்வின் போது, ராஜலட்சுமிக்கு செலுத்தப்பட்ட ரத்தம் அவரின் உடலுக்கு பொருந்தாமல் இருந்ததும், நுரையீரல் காயமடைந்து அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது. மருத்துவ அலட்சியம் காரணமாக மனைவி உயிரிழந்ததாக கூறி, சாய் பிரேமன் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

மாவட்ட குறைதீர் ஆணையத் தலைவர் தங்கவேல், உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. விசாரணையின் முடிவில், மருத்துவமனை நிர்வாகமும் மருத்துவர்களும் கடைப்பிடிக்க வேண்டிய குறைந்தபட்ச பணிகளைச் செய்யாமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக கண்டறியப்பட்டது.

இதையடுத்து, ராஜலட்சுமியின் கணவருக்கு மருத்துவர்கள் அருண்குமார், தமிழ்செல்வன், ஆண்டனி, பாலசந்தர் ஆகியோர் சேர்ந்து ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஜூலை 5-ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இந்த தீர்ப்பு மருத்துவ அலட்சியத்திற்கு எதிரான முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...