கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024: முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது

கோயம்புத்தூரில் ஜூலை 19 முதல் 28 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா 2024-க்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024, வருகின்ற ஜூலை 19 முதல் 28ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று (ஜூலை 5) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.



மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 10 நாட்கள் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதாசுமன் IAS, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கத்குமார் ஜெயின் IAS, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மு.கோகிலா, மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா தலைவர் கே.ரமேஷ், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், புத்தகத் திருவிழா உபத் தலைவர் ராஜேஷ், கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் முன்னாள் தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிகழ்வில் அதைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...