கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024: முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது

கோயம்புத்தூரில் ஜூலை 19 முதல் 28 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா 2024-க்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024, வருகின்ற ஜூலை 19 முதல் 28ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று (ஜூலை 5) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.



மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 10 நாட்கள் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதாசுமன் IAS, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கத்குமார் ஜெயின் IAS, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மு.கோகிலா, மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா தலைவர் கே.ரமேஷ், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், புத்தகத் திருவிழா உபத் தலைவர் ராஜேஷ், கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் முன்னாள் தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிகழ்வில் அதைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...