கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024: முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது

கோயம்புத்தூரில் ஜூலை 19 முதல் 28 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா 2024-க்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா இணைந்து நடத்தும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா 2024, வருகின்ற ஜூலை 19 முதல் 28ஆம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று (ஜூலை 5) கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்றது.



மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், 10 நாட்கள் நடைபெறவுள்ள நிகழ்ச்சிகள் மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் பற்றி விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ஸ்வேதாசுமன் IAS, உதவி ஆட்சியர் (பயிற்சி) அங்கத்குமார் ஜெயின் IAS, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மு.கோகிலா, மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



மேலும், கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா தலைவர் கே.ரமேஷ், கொடிசியா தலைவர் கார்த்திகேயன், புத்தகத் திருவிழா உபத் தலைவர் ராஜேஷ், கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவின் முன்னாள் தலைவர் விஜய் ஆனந்த் உள்ளிட்ட பலரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் 1.5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு நடைபெறவுள்ள நிகழ்வில் அதைவிட அதிக எண்ணிக்கையிலான மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...