கோவை வஉசி பார்க் அருகே வாலிபரை கடத்தி பணம், செல்போன், ஆவணங்கள் பறிப்பு: மூவர் கைது

கோவையில் நில விற்பனை தொடர்பான தகராறில், வாலிபரை கடத்தி பணம், செல்போன், நில ஆவணங்களை பறித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இரு நபர்கள் தலைமறைவாக உள்ளனர்.


Coimbatore: கோவை வஉசி பார்க் அருகே நடந்த கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நில விற்பனை தொடர்பான தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அச்சையூரை சேர்ந்த விவசாயி தாமோதரன் (31), தனது 35 சென்ட் நிலத்தை தாராபுரம் தாசம்பட்டியை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ஹரிபிரசாத் (34) என்பவருக்கு ரூ. 2.50 கோடிக்கு விற்க ஒப்பந்தம் செய்திருந்தார். முதற்கட்டமாக ரூ. 8.25 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால், மீதமுள்ள தொகை குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவ தினத்தன்று, நிலம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஹரிபிரசாத் தாமோதரனை கோவைக்கு அழைத்தார். வஉசி பார்க் அருகே வந்த தாமோதரனை இரண்டு வாலிபர்கள் காரில் கடத்தி சென்றனர். பின்னர் அவரிடமிருந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ. 30,000 எடுத்துக் கொண்டதோடு, அவரது செல்போன் மற்றும் நில ஆவணங்களையும் பறித்துக் கொண்டு தப்பினர்.

இது குறித்து தாமோதரன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், ஹரிபிரசாத்தின் தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஹரிபிரசாத், கணபதி சங்கனூரை சேர்ந்த பிரவீன்குமார் (37), சரவணம்பட்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பாபு (38) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய செந்தில், ஜான்சன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீசார் இவர்களை தேடி வருகின்றனர். வழக்கு தொடர்பான விசாரணை ஜூன் 5 அன்று நடைபெற உள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...