கோவை எலக்ட்ரிக் நிறுவனத்தில் முகமூடி அணிந்த நபர்கள் திருட முயற்சி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள எலக்ட்ரிக் நிறுவனத்தில் நள்ளிரவில் முகமூடி அணிந்த இரு நபர்கள் திருட முயற்சித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை சின்னவேடம்பட்டி அத்திப்பாளையம் பகுதியில் உள்ள "இயோடோம் எலக்ட்ரிக்" நிறுவனத்தில் நள்ளிரவில் முகமூடி அணிந்த நபர்கள் திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மேலாளராக ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். வழக்கமாக இரவு 7:00 மணிக்கு நிறுவனம் மூடப்பட்டு காலை 9 மணிக்கு திறக்கப்படும். ஆனால் இன்று காலை நிறுவனத்திற்கு வந்த சத்தியமூர்த்தி, சிசிடிவி கேமராக்கள் திரும்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.



சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1:30 மணியளவில் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் சுவர் ஏறி குதித்து, நிறுவனத்திற்குள் நுழைந்து சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருட முயன்றது தெரியவந்தது.

இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த சத்தியமூர்த்தி, "முகமூடி அணிந்த நபர்கள் எங்கள் நிறுவனத்தில் திருட முடியாமல் சென்றுள்ளனர். கேட்டை வளைத்துள்ளனர். திருட முயற்சி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் நிறுவனம் உள்ள பகுதிக்கு இரவு ரோந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள சரவணம்பட்டி காவல்துறையினர், நள்ளிரவில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...