கோவை எலக்ட்ரிக் நிறுவனத்தில் முகமூடி அணிந்த நபர்கள் திருட முயற்சி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் உள்ள எலக்ட்ரிக் நிறுவனத்தில் நள்ளிரவில் முகமூடி அணிந்த இரு நபர்கள் திருட முயற்சித்தனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


கோவை: கோவை சின்னவேடம்பட்டி அத்திப்பாளையம் பகுதியில் உள்ள "இயோடோம் எலக்ட்ரிக்" நிறுவனத்தில் நள்ளிரவில் முகமூடி அணிந்த நபர்கள் திருட முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிறுவனத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடத்தைச் சேர்ந்த சத்தியமூர்த்தி மேலாளராக ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். வழக்கமாக இரவு 7:00 மணிக்கு நிறுவனம் மூடப்பட்டு காலை 9 மணிக்கு திறக்கப்படும். ஆனால் இன்று காலை நிறுவனத்திற்கு வந்த சத்தியமூர்த்தி, சிசிடிவி கேமராக்கள் திரும்பி இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.



சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, நள்ளிரவு 1:30 மணியளவில் முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் சுவர் ஏறி குதித்து, நிறுவனத்திற்குள் நுழைந்து சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருட முயன்றது தெரியவந்தது.

இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்த சத்தியமூர்த்தி, "முகமூடி அணிந்த நபர்கள் எங்கள் நிறுவனத்தில் திருட முடியாமல் சென்றுள்ளனர். கேட்டை வளைத்துள்ளனர். திருட முயற்சி செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், எங்கள் நிறுவனம் உள்ள பகுதிக்கு இரவு ரோந்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டார்.

இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்துள்ள சரவணம்பட்டி காவல்துறையினர், நள்ளிரவில் முகமூடி அணிந்து கொள்ளையடிக்க முயன்ற சந்தேக நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...