ராகுல் காந்தி கள்ளக்குறிச்சிக்கு வர வேண்டும்: மத்திய அமைச்சர் எல். முருகன் வலியுறுத்தல்

கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். ராகுல் காந்தி கள்ளக்குறிச்சிக்கு வர வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழக அரசின் மது கொள்கையையும் விமர்சித்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் மத்திய அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

"மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்து பிரதமர் நரேந்திர மோடி வரலாற்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புறம்பாக பதவியேற்றுள்ளனர். ராகுல் காந்தி இன்று ஹத்ராஸ்க்கு சென்றிருக்கிறார். ஹத்ராஸ்க்கு செல்ல வழி தெரிந்த ராகுல் காந்திக்கு கள்ளக்குறிச்சிக்கு வர வழி தெரியவில்லை. இரட்டை நிலைப்பாடு எடுக்காமல் ராகுல் காந்தி உடனடியாக கள்ளக்குறிச்சிக்கு வந்து மக்களைப் பார்வையிட வேண்டும்."

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "நேற்று நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டுள்ளனர். மிகப்பெரும் உத்வேகத்தோடு விக்ரவாண்டி இடைத்தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி களத்தில் இருக்கிறது," என்றார்.

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக, "ஸ்டாலின் அரசாங்கம் கள்ளச்சாராயத்தை ஒழித்து தமிழகத்தை காக்க வேண்டும். தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டு மாணவர்களுக்கு நல்ல கல்வியை கொடுக்க வேண்டும்," என்று கூறினார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்த எடப்பாடி பழனிசாமியின் விமர்சனம் பற்றி கேட்கப்பட்டபோது, "விமர்சனங்களுக்கு எங்கள் தலைவர் சரியான பதில் கொடுத்துள்ளார். எங்கள் மாநில தலைவர் அண்ணாமலையின் செயல்பாடுகளால் பாஜக மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கட்சியாக திகழ்கிறது," என்றார்.

புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் குறித்து, "புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டங்களின் பெயர்கள் மற்றும் சட்டங்கள் தமிழாக்கம் செய்யப்படும்," என்று தெரிவித்தார்.

மேலும், "தாராபுரம் வழியாக ஈரோட்டுக்கு ரயில் பாதை கொண்டு வருவதற்கான திட்டத்தை அடுத்த பட்ஜெட்டில் அறிவித்துள்ளோம். மேட்டுப்பாளைய ரயில் நிலையத்தை 50 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து மேம்படுத்தி வருகிறோம். தேர்தலில் தோல்வியடைந்திருந்தாலும், அந்தப் பகுதி மக்களுக்கான பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்," என்று முருகன் கூறினார்.

Newsletter

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...

கோவை கங்கா நர்சிங் கல்லூரியில் நரம்பியல் அவசர சிகிச்சை குறித்த தேசிய மாநாடு சிறப்பாக நடைபெற்றது

கோவை கங்கா நர்சிங் கல்லூரி சார்பில் "நியூரோ ஃபிராண்டியர்ஸ் 2026" என்ற தலைப்பில் நரம்பியல் சார்ந்த அவசர சிகிச்சை குறித்த...

கோவையில் துணிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய மாநகராட்சியின் “மறு நெசவு” திட்டம் தொடக்கம்

கவுண்டம்பாளையம் வார்டு 33-ல் பரீட்சார்த்த முறையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் தேவையின்றி சேரும் துண...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27ல் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை மேயர் K.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் ஆய்வ...

கோவையில் தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் போக்சோவில் கைது

கோவை கருமத்தம்பட்டி சாலையில் உள்ள தனியார் பள்ளி பேருந்து உதவியாளர் சேவியர் என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தத...