பொள்ளாச்சி நவமலையில் யானைகள் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

பொள்ளாச்சி நவமலை பகுதியில் மூன்று நாட்களாக யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்கின்றனர். வனத்துறை கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.


Coimbatore: பொள்ளாச்சியை அடுத்த நவமலை சாலை ஓரத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக குட்டிகளுடன் யானைகள் கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட நவமலையில் மின்வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். நவமலை பகுதியில் உள்ள மாணவர்கள் படிப்புக்காக ஆழியார், அங்கலக்குறிச்சி மற்றும் கோட்டூர் பொள்ளாச்சிக்கு சென்று வருகின்றனர்.



இந்நிலையில், ஆழியாரிலிருந்து நவமலை செல்லும் சாலையின் ஓரத்தில் கடந்த மூன்று நாட்களாக குட்டிகளுடன் யானை கூட்டம் முகாமிட்டுள்ளது. இதனால் இவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

நேற்று இரவு குடியிருப்பு பகுதிக்கு வந்த யானைகள் கூட்டம், அங்குள்ள பலா மரங்களில் இருந்த பலாப்பழங்களை உண்டுள்ளது. இதனால் நவமலையில் உள்ள குடியிருப்பு வாசிகள் மேலும் அச்சமடைந்துள்ளனர். இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, வனத்துறையினர் சுழற்சி முறையில் யானைக் கூட்டங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...