உடுமலை அருகே ரூ.15 கோடி நில மோசடி: கணியூர் பதிவுத்துறைக்கு எதிராக விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உடுமலை அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள நிலத்தை போலியாக பத்திரப்பதிவு செய்ததற்கு எதிராக, கணியூர் பதிவுத்துறை அலுவலகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மடத்துக்குளம் கணியூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பத்திரப்பதிவு நடைபெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது. சார் பதிவாளர் பழனிச்சாமி லஞ்சம் பெற்றுக் கொண்டு ஆளும் கட்சிக்கு சாதகமாக பத்திரப்பதிவு செய்து கொடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

துங்காவி கிராமத்தைச் சேர்ந்த நடராஜ் என்பவரின் மனைவி கலைச்செல்வி மற்றும் அவரது மகன் விஜயராஜா ஆகியோரின் ரூ.15 கோடி மதிப்புள்ள சொத்துக்களை, துரைராஜா என்பவரின் மனைவி ராஜாமணி சார்பதிவாளர் அலுவலகத்தில் மோசடியாக பத்திரப்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறைகேடான பதிவுக்கு சார்பதிவாளரும் உடந்தையாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில், முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என்றும், அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி பத்திரப்பதிவு செய்து வரும் கணியூர் சார் பதிவாளரை உடனடியாக பணியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி அகில இந்திய விவசாய சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சார் பதிவாளரால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இணைந்து கலந்து கொண்டனர். மேலும் சார் பதிவாளர் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...