ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு மாமியார் கொலை மிரட்டல் விடுவதாக மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார்


கோவை மாவட்டம், சூலூர் பகுதியைச் சேர்ந்தவர் திவ்யா (27). இவரும் பொள்ளாச்சியை சேர்ந்த மோகன் என்பவரும் காதலித்து கடந்த 2011ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இத்தம்பதியினருக்கு ரித்திகா என்ற நான்கரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், கணவரின் தாயார் வரதட்சணை கேட்டு கொலை மிரட்டல் விடுவதாக இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் திவ்யா மனு அளித்தார். அம்மனுவில் கூறியுள்ளதாவது:-

எனது கணவர் பெயர் மோகன். எங்களுக்கு கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்று ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், எனது கணவரின் தாயார், என்னிடம் ரூ.5 லட்சம் வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வருகிறார். எனது கணவரை சொந்த ஊருக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்துள்ளனர். இதுகுறித்து கேட்டாலும், பணம் தராவிட்டாலும் கொலை செய்துவிடுவதாகவும் எனக்கு மிரட்டல் விடுத்து வருகிறார்.

இது தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் புகாரின் பேரில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் இப்பிரச்சனையில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...