திருப்பூர் அருகே சாராயம் காய்ச்சிய மூவர் கைது: 60 லிட்டர் சாராய ஊரல் அழிப்பு

திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். 60 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 6.4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள வெள்ளகோவில் வாய்க்கால் மேடு பகுதியில் சட்டவிரோதமாக சாராயம் காய்ச்சி விற்பனை செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 60 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 6.4 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளகோவில் பகுதியைச் சேர்ந்த மனோஜ் (30) என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.



இதையடுத்து, வெள்ளகோவில் போலீசார் மனோஜின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அவரது வீட்டில் 60 லிட்டர் சாராய ஊரல் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், விற்பனைக்காக 6.4 லிட்டர் சாராயம் காய்ச்சி வைத்திருந்ததும் தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் மனோஜுடன் சேர்ந்து அவரது நண்பர்களான செல்வராஜ் (53) மற்றும் குட்டி முருகன் (44) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட 60 லிட்டர் சாராய ஊரலை போலீசார் கீழே ஊற்றி அழித்தனர்.

காவல் நிலையத்திற்கு அருகாமையிலேயே கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்ட இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து, வெள்ளகோவில் போலீசார் அப்பகுதியில் முகாமிட்டு வாகன சோதனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...