கோவையில் பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறையின் திடீர் சோதனை: 16 கடைகளுக்கு நோட்டீஸ்

கோவையில் பானி பூரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். 73 கடைகளில் சோதனை செய்யப்பட்டு, 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. தரமற்ற உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கோவை மாநகரில் பானி பூரி விற்பனை செய்யும் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். மாவட்ட நியமன அலுவலர் தமிழ்செல்வன் தலைமையில் 10 குழுக்களாக பிரிக்கப்பட்டு இந்த சோதனை நடத்தப்பட்டது.

கோவை நகரின் பல்வேறு பகுதிகளான காந்திபுரம், வ.உ.சி. பூங்கா, காந்தி பார்க், ஆர்.எஸ்.புரம், பீளமேடு, சித்ரா, சிங்காநல்லூர், கணபதி, சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, வடவள்ளி டவுன்ஹால், ராமநாதபுரம், உக்கடம் சுந்தராபுரம், குனியமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், கிணத்துக்கடவு, தொண்டாமுத்தூர், மதுக்கரை, வால்பாறை, மேட்டுப்பாளையம், அன்னூர், பெரியநாயக்கன்பாளையம் போன்ற மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது.



இந்த சோதனையின் போது, 73 கடைகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில் 16 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. நான்கு உணவு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனைக்காக உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. மேலும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக 6 கடைகளுக்கு ரூ.12,000 அபராதம் விதிக்கப்பட்டது.



சோதனையின் போது, 65 லிட்டர் அதிக நிறமூட்டப்பட்ட பானி பூரி மசாலா, 57 கிலோ தரமற்ற உருளைக்கிழங்கு, காளான் 5 கிலோ, 19 கிலோ உருளைக்கிழங்கு மசாலா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், செய்தித்தாள்களில் சுற்றப்பட்ட பஜ்ஜி, போண்டா போன்ற உணவுப் பொருட்களும், அதிக நிறமூட்டப்பட்ட சிக்கன் 65, காளான் மசாலா போன்ற 15 கிலோ உணவுப் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு சுமார் ரூ.28,200 ஆகும்.

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த சோதனை நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...