கோவையில் நாளை மூன்று துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி: பல பகுதிகளில் மின்தடை

கோவையில் அரசூர், கள்ளிமடை, கதிர்நாயக்கன்பாளையம் ஆகிய மூன்று துணை மின் நிலையங்களில் நாளை (05.07.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. இதனால் பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை இருக்கும்.


Coimbatore: கோவை மாநகரில் மூன்று துணை மின் நிலையங்களில் நாளை (05.07.2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், பல பகுதிகளில் மின்தடை இருக்கும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

அரசூர் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை காமராஜர் சாலை, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லூர், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரைச் செட்டியார் நகர், என்.ஜி.ஆர்.நகர், ஹோப் காலேஜ் முதல் விமான நிலையம் வரை, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுஸிங் யூனிட், ஒண்டிப்புதூர் (ஒரு பகுதி), மசக்காளிபாளையம், மருத்துவக் கல்லூரி சாலை ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறும் பராமரிப்பு பணிகள் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ராக்கிபாளையம், குமரபுரம், நரசிம்மநாயக்கன்பாளையம், பாம்பேநகர், டீச்சர்ஸ் காலனி, கணேஷ் நகர், ஸ்ரீ நாரம் நகர், கதிர்நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த மின்தடை குறித்த அறிவிப்பை மின்வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்குமாறு மின்வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை ஆணையர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரின் OSD நியமனம் ரத்து: தமிழக அரசு உத்தரவு

முதல்வரின் தனிப்பட்ட ஜோதிடரான ரிக்கே ராதன் பண்டிட் வெற்றிவேலின் அரசியல் OSD நியமனத்தை, கடும் எதிர்ப்புகள் மற்றும் விமர்ச...

பொதுமக்களை விரட்டிய காங்கேயம் காளை; மரத்தில் ஏறி உயிர்தப்பிய வாலிபர்கள்.

கோவை உக்கடம் வாளாங்குளம் பகுதியில் நேற்று இரவு சுற்றித் திரிந்த காங்கேயம் காளை ஒன்று திடீரென பொதுமக்களை விரட்டியதில், பய...

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...