கோவை - மேட்டுப்பாளையம் இரட்டை இருப்புப் பாதைக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தல்

கோவை - மேட்டுப்பாளையம் இடையே இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மத்திய அமைச்சர் எல்.முருகன் இரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தார். இந்த திட்டம் பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்லும்.


Coimbatore: கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் முதல் கோவை இரயில் நிலையம் வரையிலான வழித்தடத்தில் இரட்டை இருப்புப் பாதை அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கையை வலியுறுத்தி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் மனு அளித்தார்.

மேட்டுப்பாளையம் மற்றும் காரமடை பகுதிகளைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் மற்றும் பொதுமக்கள், நீண்டகாலமாக இந்த கோரிக்கையை வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், அப்பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக, ஜூலை 4 அன்று இரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மனு வழங்கினார்.

இந்த இரட்டை இருப்புப் பாதை திட்டம் பெரியநாயக்கன்பாளையம் வழியாக செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கோவை - மேட்டுப்பாளையம் இடையிலான பயண நேரம் குறைவதோடு, அதிக எண்ணிக்கையிலான ரயில்களை இயக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் தொடங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் சந்திப்பு நடைப்பயணம்

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்தும், தொழிலாளர்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள தொழிலாளர் சட்டங்களை திரு...

தங்க நகை வழிப்பறி வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டு சிறை; ரூ.5,000 அபராதம் - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கடந்த 2020 ஆம் ஆண்டு கோவையில் 100 கிராம் தங்க நகையை கத்தி முனையில் வழிப்பறி செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட இளைஞர...

கிணத்துக்கடவு அருகே வாலிபர் கொடூரக் கொலை

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த சிக்கலாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் (22) என்ற வாலிபாரின் வீட்டிற்குள் நள்ளிரவில...

அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவையில் அரசூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் செல்...

கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (07.08.2026) மின்தடை

கோவை கதிர்நாயக்கன்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காலை 9 முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்....

பேருந்தில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; கோவையில் காவலர் கைது

பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, போத்தனூர் காவல் நிலைய கு...