சேலம் ரயில்வே கோட்டத்தில் முறையற்ற பயணிகளிடம் ரூ.5.88 கோடி அபராதம் வசூல்

சேலம் ரயில்வே கோட்டத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை டிக்கெட் இல்லாமல் பயணித்த 42,823 பேரிடமிருந்து ரூ.3.62 கோடியும், முறையற்ற பயணம் செய்த 36,619 பேரிடமிருந்து ரூ.2.25 கோடியும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் அண்மையில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பின்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான முதல் காலாண்டில் முறையற்ற பயணிகளிடமிருந்து மொத்தம் ரூ.5 கோடியே 88 லட்சத்து 17 ஆயிரத்து 813 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட சேலம், ஈரோடு, கோவை உள்ளிட்ட நிலையங்களில் பயணச்சீட்டு இல்லாமல் ரயிலில் பயணிப்பவர்கள், முறையற்ற வகையில் பயணிப்பவர்கள், பதிவு செய்யாமல் சரக்குகளை ரயிலில் கொண்டு செல்பவர்களைக் கண்டறிந்து, ரயில்வே பரிசோதனை அதிகாரிகளால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த காலகட்டத்தில், பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த 42 ஆயிரத்து 823 பேரிடம் இருந்து ரூ.3 கோடியே 62 லட்சத்து 25 ஆயிரத்து 979 அபராதம் வசூலிக்கப்பட்டது. அதேபோல, ரயில்களில் முறையற்ற பயணம் மேற்கொண்டதாக 36 ஆயிரத்து 619 பேரிடம் இருந்து ரூ.2 கோடியே 25 லட்சத்து 46 ஆயிரத்து 33 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரயிலில் பதிவு செய்யாமல் சரக்குகளைக் கொண்டு சென்ற 83 பேரிடம் இருந்து ரூ.45 ஆயிரத்து 801 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...