மு.க.ஸ்டாலினால் ஈர்க்கப்பட்டு திமுக-வில் இணைந்த கோவை வாழ் வடமாநிலத்தவர்கள்

தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலைகளினால் எந்த அரசு தங்களை ஆட்சி செய்கிறது என்ற குழப்பத்தில் மக்கள் உள்ளனர். இதற்கு காரணம் அதிமுக-வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசாலே ஆகும். தொடர்ந்து, உள்ளாட்சித் தேர்தலிலும், அதுத்தடுத்து வரும் தேர்தல்களிலும் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் விதமாக திமுக-வும் தங்களது பங்களிப்பை செலுத்தி வருகின்றன.

அதிமுகவின் நிலையற்ற ஆட்சியினைத் தொடர்ந்து, திமுக புதிய மேம்பாட்டுச் செயல்களை மேற்கொண்டு வரும் நிலையில் அக்கட்சியில் உறுப்பினர்களாக சேர்வோர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துக்கொண்டே வருகிறது.



அதன்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவராக பொறுப்பில் உள்ள மு.க.ஸ்டாலின் செயல்களால் ஈர்க்கப்பட்ட  கோவையில் வாழ்ந்து வரும் வட மாநில மொழி பேசும் சிந்தி, குஜராத்தி, ஜெயின் பஞ்சாபி, மார்வாடி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இன்று திமுகவில் இணைந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் நா.பழனிசாமி, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பைந்தமிழ் பாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் நாச்சிமுத்து, கார்த்திக் செல்வராஜ், நா.முருகவேல், ராஜேந்திர பிரபு மற்றும் மு.க.ஸ்டாலின் இளைஞர் நற்பணி மன்றத்தினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...