பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் TN GREEN CREATORS குழு அமைப்பினர் மற்றும் கலை அறிவியல் கல்லூரி NSS மாணவ, மாணவியர்கள் சார்பாக 600 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.


கோவை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு குறிப்பிடத்தக்க முயற்சியாக, பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அதன் வளாகத்தில் TN GREEN CREATORS குழு அமைப்பினர் மற்றும் கலை அறிவியல் கல்லூரி NSS மாணவ, மாணவியர்கள் சார்பாக 600 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.



இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சமூக ஆர்வலர்கள் செந்தில்குமார், அரிமா.ஸ்ரீமான் சுந்தரம், Loin.நெடுமாறன், Loin.தியாகராஜன், வெங்கடேஷ், S.பாபு, தமிழ்நாடு காவல் துறை, TN CREATOR MEMBERS லோகேஸ்ராம், நிர்மல், அஷ்வின், சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்கும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும் மரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நிகழ்வின் நோக்கமாகும். விழாவில் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் நாட்டு மரக் கன்றுகள் நடப்பட்டன.

இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் உணர்வை வளர்ப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்கை சார் ஆட்சியர் வலியுறுத்தினார். நமது இயற்கை வளங்களை பாதுகாக்க கூட்டு முயற்சியின் அவசியத்தை டிஎஸ்பி எடுத்துரைத்தார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் உ.சுமதி வரவேற்புரை நிகழ்த்தினார்.

Newsletter

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...

சிறுபான்மையினருக்கான குறைந்த வட்டி கடன் திட்டங்கள் அறிவிப்பு

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினருக்கு தனிநபர், சுயஉதவிக்குழு, கைவினை கலைஞர் மற்...