பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா

பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் TN GREEN CREATORS குழு அமைப்பினர் மற்றும் கலை அறிவியல் கல்லூரி NSS மாணவ, மாணவியர்கள் சார்பாக 600 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.


கோவை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொருட்டு குறிப்பிடத்தக்க முயற்சியாக, பொள்ளாச்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அதன் வளாகத்தில் TN GREEN CREATORS குழு அமைப்பினர் மற்றும் கலை அறிவியல் கல்லூரி NSS மாணவ, மாணவியர்கள் சார்பாக 600 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் மாணவர்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.



இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, பொள்ளாச்சி துணை காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன், சமூக ஆர்வலர்கள் செந்தில்குமார், அரிமா.ஸ்ரீமான் சுந்தரம், Loin.நெடுமாறன், Loin.தியாகராஜன், வெங்கடேஷ், S.பாபு, தமிழ்நாடு காவல் துறை, TN CREATOR MEMBERS லோகேஸ்ராம், நிர்மல், அஷ்வின், சுகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுற்றுச்சூழல் சமநிலையைப் பேணுவதற்கும் காலநிலை மாற்றத்தைத் தணிப்பதற்கும் மரங்களின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த நிகழ்வின் நோக்கமாகும். விழாவில் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவியர் மற்றும் சிறப்பு விருந்தினர்களால் நாட்டு மரக் கன்றுகள் நடப்பட்டன.

இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் உணர்வை வளர்ப்பதில் கல்வி நிறுவனங்களின் பங்கை சார் ஆட்சியர் வலியுறுத்தினார். நமது இயற்கை வளங்களை பாதுகாக்க கூட்டு முயற்சியின் அவசியத்தை டிஎஸ்பி எடுத்துரைத்தார். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் உ.சுமதி வரவேற்புரை நிகழ்த்தினார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...