கோவை சுந்தராபுரம் அருகே பைக் டாக்ஸி டிரைவரை தாக்கிய நான்கு பேர் கைது

சுந்தராபுரம் காந்திநகரில் வாடகை கேட்ட பைக் டாக்ஸி டிரைவர் ரஞ்சித்தை அடித்து உதைத்து தாக்குதல் நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சுந்தராபுரம் வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் ரஞ்சித் (34). இவர் பைக் டாக்ஸி ஓட்டி வருகிறார். இவர் நேற்று ஜூன்.27 சுந்தராபுரம் கணேசபுரத்திற்கு சவாரி சென்றார். பின்னர் அங்கு சரண் (19) என்ற வாலிபரை இறக்கி விட்டுவிட்டு வாடகை பணம் கேட்டார். அதற்கு சரண், தனது நண்பர்கள் வந்து கொண்டுள்ளனர். அவர்கள் வந்தவுடன் பணம் தருகிறேன் என தெரிவித்துள்ளார்.

ஆனால் நீண்ட நேரமாக காத்திருந்தும் யாரும் வரவில்லை. பணமும் கொடுக்கவில்லை. இதனையடுத்து ரஞ்சித், சுந்தராபுரம் காந்தி நகரில் உள்ள சரண் வீட்டுக்கு சென்று பணம் தருமாறு கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்துள்ளார்.

மேலும் அங்கு வந்த சரணின் நண்பர்கள் சிலரும் ரஞ்சித்தை தாக்கி உள்ளனர். இதில் காயமடைந்த ரஞ்சித் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.மேலும் தாக்குதலின் போது, அவரது பணம், வாட்ச் ஆகியவை காணாமல் போனது. இதுகுறித்து ரஞ்சித் சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

அதில், ரஞ்சித்தை தாக்கியது கூலி தொழிலாளி சரண், போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த சதீஷ் (21), போத்தனூரை சேர்ந்த ஸ்டாலின்(28) மற்றும் முல்லை நகரை சேர்ந்த பவித்ரன் (21) என்பது தெரியவந்தது. பின் போலீசார் 4 பேரையும் கைது செய்தனர்.

Newsletter

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...

கோவை போத்தனூரில் கட்டுமான தளத்தில் பணியாற்றிய இளைஞர் திடீர் மரணம்

கோவை போத்தனூர் கிரீன் பார்க் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த வெள்ளலூரை சேர்ந்த 29 வயது இளைஞர் சந்தோஷ் திடீரென ம...

போதைப் பொருட்கள் தடுப்புப் படை: கோவையில் சிறப்புப் படையினர் தயார் நிலையில்!

கோவை மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர், முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த போதைப் பொருட்கள் தடுப்புப் படை மற்றும் சிங்கப் ப...