எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரித்த கோவை நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன், வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, சாலையில் நடந்து செல்வோரெல்லாம் ஒருங்கிணைப்புக் குழு என்று ஆரம்பித்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா என்றும், ஓ.பன்னீா்செல்வம் காலத்தில் அதிமுகவில் சோ்ந்த கோவையைச் சோ்ந்தவா் அந்தக் குழுவில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தன்னைக் குறித்தும், ஒருங்கிணைப்புக் குழு குறித்தும் அவதூறான கருத்துகளை தெரிவித்த எடப்பாடி கே.பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி.பழனிசாமி, கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, கோவை முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில், நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று ஜூன்.27 விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கு மீதான விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...