எடப்பாடி பழனிசாமி மீதான அவதூறு வழக்கை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை நீதிமன்றம் உத்தரவு

எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி.பழனிசாமி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரித்த கோவை நீதிமன்ற நீதிபதி கோபாலகிருஷ்ணன், வழக்கின் மீதான விசாரணையை ஜூலை 6ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.


கோவை: கோவை விமான நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி செய்தியாளா்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளா் எடப்பாடி கே.பழனிசாமி, சாலையில் நடந்து செல்வோரெல்லாம் ஒருங்கிணைப்புக் குழு என்று ஆரம்பித்தால் அதற்கு பதில் சொல்ல வேண்டுமா என்றும், ஓ.பன்னீா்செல்வம் காலத்தில் அதிமுகவில் சோ்ந்த கோவையைச் சோ்ந்தவா் அந்தக் குழுவில் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தன்னைக் குறித்தும், ஒருங்கிணைப்புக் குழு குறித்தும் அவதூறான கருத்துகளை தெரிவித்த எடப்பாடி கே.பழனிசாமி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி முன்னாள் மக்களவை உறுப்பினா் கே.சி.பழனிசாமி, கோவை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு, கோவை முதலாவது நீதித் துறை நடுவா் மன்றத்தில், நீதிபதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று ஜூன்.27 விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, இவ்வழக்கு மீதான விசாரணையை ஜூலை 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Newsletter

நீலாம்பூர் அச்சங்குளத்தில் 35 வயது வாலிபர் சடலமாக மீட்பு; போலீசார் தீவிர விசாரணை

கோவை நீலாம்பூர் அச்சங்குளம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரத்தக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம்...

மாதம்பட்டி சாலையில் விபத்து: பைக் மீது மோதிவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிய கார்..! வைரல்

கோவை மாதம்பட்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் மீது அதிவேக கார் மோதிவிட்டு நிற்காமல் தப்பிச் சென்ற சம்பவம் பரபர...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

நாடு திரும்பிய சோழர் செப்பேடு: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பாராட்டு தெரிவிக்காதது “திட்டமிட்ட அலட்சியம்” – வானதி சீனிவாசன்

நாகப்பட்டினம் ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகள் நெதர்லாந்திலிருந்து இந்தியாவிற்கு திரும்பியுள்ள நிலையில், பிரதமர் நரேந்தி...

கோவை பீளமேடு வார்டில் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சாலையோர குப்பை அகற்றல், சாக்கடை மண் சுத்தம், சாக்கடை அடைப்பு சரிசெ...

ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி தொடக்கம்: 50 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் 128-வது மலர் கண்காட்சி இன்று (மே 18) தொடங்கி மே 28 வரை நடைபெறுகிறது. சுற்றுலாப் பயணிகளின் வசத...