கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் - மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கிழக்கு மண்டலம் வார்டு எண்.66க்குட்பட்ட இராமநாதபுரம் சிக்னல், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார். சாலை ஓரங்களில் படிந்துள்ள மண்களை அகற்றி, குடிநீர் திட்டப் பணிகளை உடனடியாக முடித்திட அலுவலர்களுக்கு அவர் உத்தரவிட்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சூயஸ் நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன் இன்று (27.06.2024 நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி கிழக்கு மண்டலம் வார்டு எண்.66க்குட்பட்ட இராமநாதபுரம் சிக்னல், சிங்காநல்லூர் ஆகிய இடங்களில் குடிநீர் பிரதான குழாய் பதிக்கும் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, சாலை ஓரங்களில் படிந்துள்ள மண்களை அகற்றி, குடிநீர் திட்டப் பணிகளை உடனடியாக செய்து முடித்திட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.



மேலும், மாநகராட்சி ஆணையாளர், ஒண்டிபுதூர் பாதாள சாக்கடை திட்டப்பணிகளையும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து வடக்கு மண்டலத்திற்குட்பட்ட காந்தி மாநகர் அருகில் அமைந்துள்ள உணவு தானிய சேமிப்புக் கிடங்கு (FCI Godown) பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உயரமான வேகத்தடைகளை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வேகத்தடையின் உயரத்தினை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



முன்னதாக கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.62க்குட்பட்ட கொங்கு நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான காலி இடத்தில் புதிய திட்டப்பணிகள் அமைப்பது தொடர்பாகவும் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, கிழக்கு மண்டலம் ஒண்டிபுதூர் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி மற்றும் திருச்சி சாலை இராமநாதபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிகளின் உட்கட்டமைப்பினை மேம்படுத்துவது தொடர்பாக மாநகராட்சி ஆணையாளர் நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வுகளின்போது, மாநகராட்சி துணை ஆணையாளர் மரு.ச.செல்வசுரபி, வடக்கு மண்டல தலைவர் வே.கதிர்வேல், மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் முரளிகுமார், உதவி ஆணையர்கள் கவிதா, செந்தில்குமரன், செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர்கள் ஹேமலதா, ராஜேஸ்கண்ணா, எழில், நகரமைப்பு அலுவலர் குமார், உதவி பொறியாளர்கள், சூயஸ் நிறுவன அலுவலர்கள், உணவு தானிய சேமிப்பு கிடங்கு அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...