துர்கா ஸ்டாலின் சகோதரருக்கு தமிழக அரசு முக்கிய பதவி - மருத்துவ பணிகள் இயக்குனராக நியமனம்

தமிழக இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக இருந்த துர்கா ஸ்டாலின் சகோதரர் ராஜமூர்த்திக்கு, சமீபத்தில் டி.எம்.எஸ் தர நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. தற்போது, மாநில மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.


கோவை: துர்கா ஸ்டாலின் சகோதரரும், மருத்துவருமான ஜெ.ராஜமூர்த்தி டி.எம்.எஸ் இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். டாக்டர் ஜெ.ராஜமூர்த்தி மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் (டி.எம்.எஸ்) இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினின் சகோதரர் ஆவார்.

தமிழக இ.எஸ்.ஐ., மருத்துவமனைகளின் கூடுதல் இயக்குனராக இருந்த ராஜமூர்த்திக்கு, சமீபத்தில் டி.எம்.எஸ் தர நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி, தற்போது மாநில மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவைகள் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆளுநரின் ஒப்புதலுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இவர் மாநிலத்தில் உள்ள அனைத்து தாலுகா மற்றும் மாவட்ட மருத்துவமனைகளையும் கட்டுப்படுத்தி பொறுப்பு வகிப்பார். இதுவரை டி.எம்.எஸ் ஆக இருந்து வந்த டாக்டர் ஆர்.இளங்கோ மகேஸ்வரன், இவர் வகித்து வந்த டி.எம்.எஸ் இ.எஸ்.ஐ., மருத்துவமனைகள் பொறுப்புக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...