கோவை ரெயில் நிலையத்தில் ரூ.25,000 பணம் மற்றும் 2 செல்போன் பறிப்பு - ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை

ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுத்துக்கொடுக்க உதவுவதுபோல் நடித்து பீகார் மாநிலத்தை சேர்ந்த பிலாந்தரிடம் ரூ.25 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு செல்போன்களை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் பிலாந்தர் (35). இவர் கோவையில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார். நேற்று ஜூன்.24 அவர் சொந்த ஊர் செல்ல டிக்கெட் முன் பதிவு செய்வதற்காக கோவை ரயில் நிலையம் வந்தார். அப்போது ரயில் நிலையம் முன்பு நின்றிருந்த மர்ம நபர் ஒருவர் பிலாந்தரிடம் சென்று டிக்கெட் எடுத்து தருவதற்கு உதவி புரிவதாக தெரிவித்தார்.

இதனை நம்பி பிலாந்தர் அந்த வாலிபருடன் நடந்து சென்றார்.அப்போது அந்த மர்ம நபர் திடீரென பிலாந்தரிடம் இருந்த ரூ. 25 ஆயிரம் பணம் மற்றும் 2 செல்போன்களை பறித்து சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பிலாந்தர் இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Newsletter

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர்-சென்னை சிறப்பு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிப்பு

கோடை விடுமுறையையொட்டி போத்தனூர் மற்றும் சென்னை இடையே இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவை ஜூன் 5 வரை நீட்டிக்கப்பட்டுள...

கழிவு பஞ்சு ஏற்றுமதியை கட்டுப்படுத்த வேண்டும்: மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம் ‘ஒஸ்மா’ அமைப்பு கோரிக்கை

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ஜவுளித்துறை ஆணையரிடம், கழிவுப்பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை...