கோவையில் கொலை செய்யும் திட்டத்துடன் துப்பாக்கியுடன் சுற்றிய நான்கு பேர் கைது

ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டி துப்பாக்கியுடன் சென்ற நான்கு பேரை சொக்கம்புதூர்-முத்தண்ணன் குளத்து சாலையில் போலீசார் விரட்டிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, ஒரு கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.



கோவை: கோவை, சொக்கம்புதூரில் இருந்து முத்தண்ணன் குளத்துக்கு செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் போலீஸார் ஜூன்.24 ஈடுபட்டிருந்தனா். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த 4 போ், போலீஸாரை பார்த்ததும் தப்பிச் செல்ல முயன்றனா். இதையடுத்து அவா்களை போலீஸார் விரட்டிப் பிடித்தனா்.

விசாரணையில், செல்வபுரம் வடக்கு ஹவுஸிங் யூனிட்டை சோ்ந்த சஞ்சய்குமார்(24), தீத்திபாளையத்தைச் சோ்ந்த ஜலாலுதீன் (50), இடையா்பாளையத்தைச் சோ்ந்த சரவணகுமார் (40), செல்வபுரத்தைச் சோ்ந்த சல்புல்கான்(40) என்பது தெரியவந்தது.



இதில் சஞ்சய்குமாரிடம் தோட்டா இல்லாத துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸார் கைது செய்தனா். பின்னர் இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘பிடிபட்ட 4 பேரும் ரௌடி சஞ்சய் ராஜாவின் குழுவைச் சோ்ந்தவா்கள். ஒருவரை கொலை செய்ய திட்டமிட்டு சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது. அவா்களிடமிருந்து துப்பாக்கி, கத்தி, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, என்று தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கோரி ABVP போராட்டம்

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன் சக மாணவர்கள் அடங்கிய கும்பலால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்...

பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம்: மேயரும் ஆணையாளரும் விளாங்குறிச்சியில் ஆய்வு

கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டல விளாங்குறிச்சி சந்திப்பில் பில்லூர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகக் குழாய் இணைப்பு...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி: மாவட்ட ஆட்சியர் பங்கேற்பு

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர...

கோவையில் போலி இறப்பு, வாரிசு சான்றிதழ்கள் மூலம் ரூ.32 கோடி சொத்துக்களை அபகரிக்க முயற்சி: 9 பேர் மீது வழக்குப்பதிவு

கோவை மசக்காளிபாளையத்தில் தனியார் நிறுவன மேலாளருக்குச் சொந்தமான நிலம் உள்ளிட்ட ரூ.32 கோடி மதிப்பிலான சொத்துக்களை போலி இறப...

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...