வால்பாறை அருகே கூழாங்கல் ஆற்றில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலாப்பயணிகள்

மழை காரணமாக கூழாங்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி ஆபத்தை உணராமல் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.



கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஆறுகளில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில், ஆற்றில் குளிக்கவும்,தண்ணீரில் இறங்கி விளையாடவோ கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.



கூழாங்கள் ஆறு மற்றும் நல்லகாத்து ஆறு, நடுமலை ஆறு, வெள்ளம் மலை டானல், கெஜமுடி ஆறு, சோலையார் பிர்லா பால்ஸ், சோலையார் அணை ஆறு, கருமலை இறைச்சிப்பாறை ஆறு, போன்ற ஆறுகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் குறைவான மழை பெய்யும் பொழுது, வனப்பகுதியில் அதிகமான மழை பெய்யும். இதனால் ஆற்றில் திடீர் காற்றாற்று வெள்ளம் ஏற்படும். தண்ணீரில் இறங்கி குளிக்கும் சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் ஆற்றில் தண்ணீரில் அடித்து செல்வார்கள் என்று இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆறுகளில் இறங்க குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.



இத்த தடைகளை மீறி கூழாங்கல் ஆற்றில் காவல்துறை இல்லாத சூழ்நிலையில், சட்ட விரோதமாக அப்பகுதிகளில் கடைகளை நடத்தக்கூடிய வியாபாரிகள், வியாபார நோக்கத்தோடு சுற்றுலாப் பயணிகளை ஆற்றில் இறங்கி குளிக்க மற்றும் விளையாடுவதற்கு அனுமதிக்கிறார்கள் என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.

இதில் ஆபத்தை உணராமல் குளிப்பதால் திடீர் வெள்ளம் பெருக்கு வந்தால் என்ன செய்வது என்று அறியாமல் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.

கூழாங்கல் ஆற்றுப்பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்ற வேண்டும் என்றும், சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள் மட்டும் கடைகளை வியாபாரம் செய்ய அனுமதிக்குமாறு சுற்றுலா பயணிகள் கேட்டுக்கொண்டனர். ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என்று பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...