கிட்டாம்பாளையத்தில் பட்டா நிலம் ஆக்கிரமிட்பு - பஞ்சாயத்து தலைவர் மீது கோவை ஆட்சியரிடம் மக்கள் புகார்

கிட்டாம்பாளையம் பகுதியில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு வழங்கியுள்ள பட்டா நிலத்தை பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமிட்பு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் கோவை ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.


கோவை: கோவை கருமத்தம்பட்டி கிட்டாம்பாளையம் பகுதியில் வசித்து வரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளது.

இந்த நிலையில் அந்த பட்டா நிலத்தை கிட்டாம்பாளையம் பஞ்சாயத்து தலைவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அந்த நிலத்தை மீட்டு தர வலியுறுத்தியும் அப்பகுதி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் தலைவரிடம் இன்று ஜூன்.24 மனு அளித்தனர்.

இது குறித்து ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் முதல் முதலமைச்சர் வரை மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர்கள், நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் முதல்வரை நேரில் சந்திக்க செல்ல உள்ளதாக கூறினர்.

மேலும் 2019ஆம் ஆண்டிலிருந்து சுமார் 350க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளித்து வருவதாகவும், அதற்கு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.

Newsletter

கோவை - ஷார்ஜா இடையே 16 நாட்களில் 5000 பேர் பயணம், 50 டன் சரக்குகள் ஏற்றுமதி

மார்ச் மாதத்தில் கோவை-ஷார்ஜா இடையே 16 நாட்களில் ஏர் அரேபியா நிறுவனம் சார்பில் விமான சேவைகள் வழங்கப்பட்டன. 4,880 பேர் பயண...

வேட்புமனு தாக்கல் செய்த 2 நாட்களில் 110 வழக்கு: தேர்தல் ஆணையத்திடம் K. Surya புகார்

கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி பொதுச்செயலாள...

கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவை

தென் ரயில்வே கோவையிலிருந்து தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலிக்கு வாரத்தில் 6 நாட்கள் ரயில் சேவையை அறிவித்துள்ளது. திருந...

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...