கோவையில் மிதமான பூகம்பத்தினால் எளிதில் பாதிக்கக்கூடிய பகுதிகள் அதிகம் - அண்ணா பல்கலை ஆய்வில் தகவல்

கோவை தெற்கு பகுதியில் உள்ள நொய்யல் நதி, உக்கடம் குளம் மற்றும் சங்கனூர் ஓடை ஆகிய பகுதிகள் பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் என்று அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.



கோவை: கோவை மற்றும் சேலம் மாநகரங்களில் உள்ள சுமார் 80% பகுதிகள் மிதமான பூகம்பத்தினால் எளிதில் பாதிப்பு அடையக்கூடியவை என்பது அண்ணா பல்கலைகழகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் பேரிடர் மேலாண்மை மையம் அண்மையில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

தமிழக அரசின் நில அதிர்வு அபாய மதிப்பீடு பணிகளில் ஒன்றாக, 'Seismic Hazard Assessment and Microzonation of Salem and Coimbatore Cities' என்ற பெயரில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. அதில் மிதமான பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் கோவை தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் உள்ளது. கோவை தெற்கு பகுதியை பொறுத்தவரை பூகம்ப பாதிப்பு உள்ள பகுதிகள் நொய்யல் நதி, உக்கடம் குளம் மற்றும் சங்கனூர் ஓடை ஆகிய பகுதிகளை சுற்றிஅமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்டப்பட்ட கட்டிடங்களில் எவையெல்லாம் பாதிக்கப்படக்கூடியவையாக இருக்கின்றதோஅந்தகட்டிடங்களை மறுசீரமைப்பது அவசியம் எனவும், அதை செய்தால் தான் பூகம்பம் ஏற்பட்டால் அப்போது பாதிப்பு குறைவானதாக இருக்கும் என்றும், இனி கட்டப்படும் கட்டிடங்கள் பூகம்பங்களை எதிர்கொள்ளும் தன்மை கொண்டவையாக வடிவமைக்கப்படுவதை உறுதி செய்தல் வேண்டும் என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...