தாராபுரம் அருகே செம்மண் கடத்திய இரண்டு லாரிகள், ஜேசிபி இயந்திரம் பறிமுதல்..!

தாராபுரம் பகுதியில் அனுமதி இன்றி எந்த வகையிலும் மண் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.


Coimbatore: தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கிராவல் மண் கடத்தப்பட்டு வருவதாக தாராபுரம் வட்டாட்சியருக்கு தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்து வருகிறது.

இந்நிலையில் அலங்கியம் அருகில் வட்டமலை புதூர் செல்லும் சாலையில் உள்ள 3 ஏக்கர் விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக செம்மண் கடத்தப்பட்டு வந்தது தெரிய வந்தது. இதை எடுத்து தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு டிப்பர் லாரிகள் மற்றும் ஜேசிபி இயந்திரம் மண் அள்ளிக் கொண்டு இருப்பதை பார்த்தார். இதைப் பார்த்த டிப்பர் லாரி ஓட்டுநர்கள் சாவியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடினர்.

தாராபுரம் வட்டாட்சியர் கோவிந்தசாமி மற்றும் வருவாய் ஆய்வாளர் பாரதி, கிராம நிர்வாக அலுவலர்கள் மாரியப்பன்,சக்திவேல், நந்தகோபல், சுரேஸ் அவர்களை வைத்து இரண்டு லாரிகளையும் ஜேசிபி இயந்திரத்தை பறிமுதல் செய்து அலங்கியம் காவல் நிலையத்தில் ஒடைத்தனர். தாராபுரம் பகுதியில் அனுமதி இன்றி எந்த வகையிலும் மண் கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தாசில்தார் எச்சரித்துள்ளார்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...