தாராபுரத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் நன்றி

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தாராபுரம் திமுக ஒன்றிய, நகர, பேரூர், கழக திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கே. இ.பிரகாஷ் நன்றி தெரிவித்தார்.


திருப்பூர்: தாராபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் தாராபுரம் நிர்வாகிகளை சந்தித்து நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், மாநகராட்சி நான்காவது மண்டல குழு தலைவருமான பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது.

தாராபுரம் நகர பகுதிக்கு வருகை தந்த ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ. பிரகாஷ் தாராபுரம் நகர பகுதியில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ சிலைக்கும், தந்தை பெரியாரின் திருஉருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.



அதன் பிறகு தாராபுரம் நிர்வாகிகளை சந்திக்கும் நிகழ்ச்சி தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. நடைபெற்ற இந்தநிகழ்ச்சியில் தாராபுரம் திமுக ஒன்றிய, நகர பேரூர் கழக திமுக நிர்வாகிகளை சந்தித்து ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் கே.இ. பிரகாஷ் வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தார்.

இது குறித்து ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ் பேசியதாவது, கோவை மண்டலத்திற்கு உட்பட்ட 63 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து மொடக்குறிச்சி தனது சொந்த சட்டமன்ற தொகுதியில் மற்ற வேட்பாளர்களை விட 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.



இதேபோன்று தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தெரிவித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 1300 வாக்குகள் வித்தியாசத்தில் தான் நமது கூட்டணி உழைப்பாளர் கயல்விழி செல்வராஜ் வெற்றி பெற்றார். அதைத் தொடர்ந்து தற்போது நடைபெற்றுள்ள நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம் என்பதையும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒன்றாக உழைத்து 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் எனவும் தெரிவித்தார். ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பொதுமக்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து உதவிகள் செய்வேன் எனவும், ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்கு வரும் நிதியிலிருந்து தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு வேண்டிய தேவைகளை பூர்த்தி செய்வேன் எனவும் தெரிவித்தார்.

Newsletter

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...

மீண்டும் இ-மெயில் மூலம் கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..! – மர்ம நபரை பிடிக்க போலீசார் தீவிரம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீண்டும் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து, மெட்டல் டிடெக்டர் கருவ...

உயர் இரத்த அழுத்தம்: GKNM மருத்துவமனையில் மூன்று நாள் விழிப்புணர்வு முகாம்

உலக உயர் இரத்த அழுத்த நாளை முன்னிட்டு GKNM Hospital மருத்துவமனையில் மே 18 முதல் 20 வரை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற...

கோவை அருகே சாராயம் காய்ச்சிய 2 பேர் கைது; 20 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்..!

கருமத்தம்பட்டி அருகே சாராயம் காய்ச்சியதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் நடத்திய சோதனையில், 2 பேர் கைது செய்யப்பட...