பொள்ளாச்சியில் பூச்சி மருந்து குடித்து விவசாயி தற்கொலை முயற்சி - காவல்துறையினர் தடுத்து நிறுத்தம்

கள் விற்பனைக்கு அனுமதிக்கோரி ஊர்வலமாக வந்த விவசாயிகளை காவல்துறையினர் தடுத்தனர். அப்போது பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற பாலசுப்பிரமணியம் என்ற விவசாயியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.


கோவை: கள்ளக்குறிச்சி பகுதியில் விஷ சாராயம் அருந்தி 50க்கும் மேற்பட்டோர் உயிர் இருந்த நிலையில் அதை மையப்படுத்தி பொள்ளாச்சி பகுதியில் ஆனைமலை, நெகமம், பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் கள் இறக்கி விற்பனை செய்து வருகின்ற நிலையில் அதை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக இன்று நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்க தலைவர் பாபு தலைமையில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த ஊர்வலமாக வந்தனர். அப்போது காவல்துறையினர் விவசாயிகளை தடுத்து நிறுத்தினார்.



அப்போது விவசாயி பாலசுப்ரமணியம் கையில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை முயற்சிக்கு முற்பட்ட போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், காவல்துறையினருக்கும், விவசாயிகளுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்களுக்கான சிறப்பு முகாம்

கோவை மாநகராட்சி ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் தூய்மைப் பணியாளர்களுக்கான அரசு சேவைகள் சிறப்பு முகாம் நடைபெற்றது. மேயர் கா.ரங்...

வாடகை நிலுவைக்கு கோவை மாநகராட்சி கடைகளுக்கு சீல்: ரூ.24.63 லட்சம் வசூல்

கோவை மாநகராட்சி வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 10 கடைகள் சீல் வைக்கப்பட்டன. மொத்தம் ரூ.54.38 லட்சம் நிலுவையில், ரூ.24....

கோயம்புத்தூரில் 24 மணி நேர குடிநீர் திட்டப் பணிகளுக்கான தளங்களை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூரில் SUEZ நிறுவனத்தின் 24 மணி நேர குடிநீர் திட்டத்திற்கான குழாய் அமைப்பு இடங்களையும் சாக்கடைப் பணி தளங்களையும...

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் நாளை (24.07.2026) பராமரிப்பு பணி - பல பகுதிகளில் மின்தடை

பதுவம்பள்ளி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் பது...

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் நாளை  (24.07.2026) மின்தடை

கோவை ரேஸ்கோர்ஸ் துணை மின் நிலையத்தில் ஜூலை 24 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவ...

கோவை பீளமேடு பகுதியில் நூலகம் மற்றும் சாக்கடை பராமரிப்பு பணிகளை ஆய்வு செய்த வார்டு கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் முழு நேர கிளை நூலகம், சாக்கடை அடைப்பு சரிசெய்தல் மற்றும் துப்புரவு பணிக...