கோவை விளாங்குறிச்சியில் குடிநீர் தொட்டி இருக்கும் இடத்தில் இருந்து பாம்புகள் வருவதாக பொதுமக்கள் புகார்

குடிநீர் தொட்டிக்கு கீழே சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி வீடுகள் இருக்கும் பகுதிகளுக்கு வந்து விடுகிறது. இதனால் இந்தப்பகுதியில் வசிப்பதற்கு அச்சமாக உள்ளது என்று மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாநகராட்சி 32-வது வார்டு விளாங்குறிச்சி மருதம் நகர் பகுதியில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் குடிநீர் தொட்டி உள்ளது. தற்போது இந்த குடிநீர் தொட்டி அமைந்துள்ள இடத்தில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் சூழலில் குடிநீர் தொட்டிக்கு கீழே சுற்றிலும் புதர் மண்டி கிடப்பதால் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அடிக்கடி வீடுகள் இருக்கும் பகுதிகளுக்கு வந்து விடுவதாகவும், இதனால் இப்பகுதியில் வசிப்பதற்கே அச்சமாக உள்ளதென அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.



மேலும் இப்பகுதியில் குழந்தைகள் விளையாடவே முடியாத சூழல் நிலவுவதாகவும், நடந்து செல்லவே பயமாக இருப்பதாகவும், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் கூறினர்.

தண்ணீர் தொட்டி இருக்கின்ற இடத்தை மாநகராட்சி பணியாளர்களோ, குடிநீர் வடிகால் வாரிய பணியாளர்களோ அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டுமென இன்று ஜூன்.22 கோரிக்கை விடுத்தனர். சுத்தம் செய்தால் மட்டுமே பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகள் இருக்கின்ற பகுதிகளுக்கு வராமல் இருக்கும் என தெரிவித்தனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...