எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழா – துடியலூரில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி நிர்வாகிகள் கொண்டாட்டம்

எஸ்டிபிஐ கட்சியின் 16ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு அரவான் திடல் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, துவக்க தின கல்வெட்டை நிர்வாகிகள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.


கோவை: கோவை துடியலூரில் SDPI கட்சியின் 16 ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு கட்சிக் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். மேலும் துவக்க தின கல்வெட்டையும் திறந்து வைத்தனர். SDPI கட்சியின் 16 ம் ஆண்டு துவக்க தினத்தை முன்னிட்டு இன்று நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட துடியலூர் பகுதியில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தொகுதி தலைவர் யாசர் அரபாத் தலைமை ஏற்க, தொகுதி செயலாளர் கமருதீன் முன்னிலை வகுக்க, தொகுதியின் அமைப்புச் செயலாளர் அப்துல் லத்தீப் மற்றும் சக நிர்வாகிகள் கலந்து கொண்டு கொடி ஏற்றினர்.



தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் அரவான் திடல் பகுதியில் கட்சிக் கொடி ஏற்றி, துவக்க தின கல்வெட்டை திறந்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் பசியற்ற, பயமற்ற இந்தியாவை கட்டமைக்க வேண்டும், மதவாதத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்னும் சூழல் இந்திய தேசத்தில் நிலவ வேண்டும் என்று உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...

போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் பிளாஸ்டிக் கிடங்கில் பயங்கர தீ விபத்து - லட்சக்கணக்கில் சேதம்

கோவை போத்தனூர்-செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் கிடங்கில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்...

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...